யாழ்.மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்..!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் உயிரிழப்புக்கு நீதிகோரியும் யாழ்.மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டு மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள்,எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்க்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, 

இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா,வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்,எமது கடல் எமக்கு வேண்டும்,கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அப்பகுதியில் பொலீசார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு