யாழ்.பருத்தித்துறை - பொன்னாலை கரையோர வீதி முடக்கம்..! தீவிரமடைகிறது மீனவர்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - பொன்னாலை கரையோர வீதி முடக்கம்..! தீவிரமடைகிறது மீனவர்கள் போராட்டம்..

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.பருத்தித்துறை மீனவர்கள் நேற்றய தினம் தொடங்கிவைத்த வீதி முடக்க போராட்டம் பருத்தித்துறை தொடக்கம் பொன்னாலைவரை விரிவாக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை - பொன்னாலை பிரதான வீதியை மறித்து மீனவர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கடற்பரப்புக்குள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறிய நூற்றுக் கணக்கான இந்திய மீன்பிடிப் படகுகள் உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தித் தப்பித்தன.

அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் நேற்று முற்பகல் வீதி மறியல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் 

வடமராட்சி தொடக்கம் பொன்னாலை வரையான கரையோர முதன்மை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு