இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை பொதுவெளியில் மிரட்டினார் அங்கஜன் இராமநாதன்! இ.போ.ச ஜனநாயக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டு, கண்டனமும் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை பொதுவெளியில் மிரட்டினார் அங்கஜன் இராமநாதன்! இ.போ.ச ஜனநாயக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டு, கண்டனமும் தொிவிப்பு..

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் இ.போ.ச வடபிராந்திய பிரதான முகாமையாளர் குணபால செல்வத்தை பல அதிகாரிகள் முன்னிலையில் எச்சரித்த மையை வன்மையாக கண்டிக்கிறோம். என இ.போ.ச வடபிராந்திய ஜனநாயக தொழிற்சங்கத்தின் தலைவர் புவிதரன் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கூறுகையில், இ.போ.ச வட பிராந்தியத்தில் பிரதான முகாமையாளரை 

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வீதிப் போக்குவரத்து தொடர்பான கூட்டத்துக்கு அழைத்து புதிய பஸ் தரிப்பிடத்திற்கு செல்கிறீர்கள் என கேட்டு அங்கஜன் இராமநாதன் முரண்பட்டுள்ளார்.

எமது முகாமையாளரை கூட்டத்துக்கு அழைத்த நோக்கத்திற்கு மாறாக கேள்வியைத் தொடுத்து பல அதிகாரிகள் முன்னிலையில் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாவிட்டால் முகாமையாளர் மாற்றி அதனை செய்வேன் 

என அதிகாரியை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை எமக்கு பயத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. வடபிராந்தியத்தில் தமிழ் மொழி தெரிந்த பிரதான முகாமையாளர் இல்லாத காரணத்தினால் 

நாம் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த நிலையில் மும்மொழி ஆளுமை உள்ள தமிழ் அதிகாரியை நியமித்தமையை அங்கஜன் தடுத்து வந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியை தொடர்ந்து 

தற்போதைய பிரதான முகாமையாளரை மீண்டும் சேவையில் இணைத்ததன் மூலம் எமது பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.எமக்கு புதிய பேருந்து தரிப்பிடத்துக்குச் செல்வதில் பிரச்சினை இல்லை. 

ஆனாலும் அது தனித்துவமான சேவையை பாதிக்கும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு