யாழ்ப்பாணம் - சர்வதேச வர்த்தக கண்காட்சி 21ம் திகதி ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - சர்வதேச வர்த்தக கண்காட்சி 21ம் திகதி ஆரம்பம்..!

12 ஆவது தடவையாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைவரை யாழ்.முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

இது குறித்து யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் கு.விக்னேஷ் தொிவித்துள்ளதாவது, இக் கண்காட்சியில் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் 

தமது பொருட்களை காட்சி படுத்துவதற்கான கூடங்கள் அமைத்து கொடுக்கப்படுகின்றது. உள்ளூர் உற்பத்தியாளர்களை தேசிய நீதியில் எடுத்துச் சென்று சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 

குறித்த கண்காட்சி அமையும் என்றார். குறித்த கண்காட்சியை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் 10 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமிகளுக்கு இலவசமாக கண்காட்சியைப் பார்க்க இடமளிக்கப்படும். 

அதே வேளை ஏனையவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு