ஆட்டுக்கு குழை வெட்டிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு! யாழ்.கரணவாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆட்டுக்கு குழை வெட்டிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு! யாழ்.கரணவாயில் சம்பவம்..

கிணற்று கட்டில் ஏறி ஆட்டுக்கு குழை வெட்டிய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கரணவாய் அண்ணா சிலையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

நேற்றய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மாலை 6.00 மணியளவில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக 

கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டியபோது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு