யாழ்.மீசாலை - அல்லாரை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த 15 நீளமான மலைப்பாம்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை - அல்லாரை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த 15 நீளமான மலைப்பாம்பு!

யாழ்.மீசாலை - அல்லாரை பகுதியில் சுமார் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மக்களால் பிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்றுபார்த்தபோது 

மலைப்பாம்பு சேவலை விழுங்க முற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர். 

கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு