யாழ்.நாவற்குழியில் கோஷ்டி மோதல்! பெண் உட்பட 4 பேர் காயம், பொலிஸாருக்கு அடங்காததால் இராணுவம் புகுந்து அடக்கியது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் கோஷ்டி மோதல்! பெண் உட்பட 4 பேர் காயம், பொலிஸாருக்கு அடங்காததால் இராணுவம் புகுந்து அடக்கியது..

யாழ்.நாவற்குழி - புதிய குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குடியிருப்பு பகுதியில் உள்ள கோஷ்டி ஒன்று வீடுகள் மீது தாக்குதல் நடத்திய கோஷ்டி மீது தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. இதனையடுத்து இரு கோஷ்டியும் மாறி மாறி மோதி் கொண்டதில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டபோதும் மோதல் நிலையை கட்டுப்படுத்த முடியாமல்போனமையினால், 

படையினர் குவிக்கப்பட்டு சம்பவ இடத்தை சுற்றிவளைத்த படையினர் வன்முறை கோஷ்டிகளை அடக்கினர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு