புகைரதம் வருவதை அறியாமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் மீது மோதிய புகைரதம்! யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புகைரதம் வருவதை அறியாமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் மீது மோதிய புகைரதம்! யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகைரதம் மோதியதில் தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சாவகச்சேரி-கச்சாய் வீதி புகையிரதக் கடவைக்கும்-கந்தையா வீதி புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில் கல்வயல் முதலாம் கட்டை சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த

34 வயதான பிரகாஷ் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு காது கேளாமை காரணமாகவே இவ் விபத்து நேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு