யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது!

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. 

நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.  

குறித்த நபர் கடந்த 9 திகதி அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு