யாழ்.நாவாந்துறையில் சுமார் 300 கிலோ எடைகொண்ட ஆமையுடன் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் சுமார் 300 கிலோ எடைகொண்ட ஆமையுடன் ஒருவர் கைது!

யாழ்.நாவாந்துறையில் சுமார் 300 கிலோ எடையுள்ள ஆமையை வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு