வேக கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய ஆடைத்தொழிற்சாலை பேருந்து..! 26 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய ஆடைத்தொழிற்சாலை பேருந்து..! 26 பேர் காயம்..

திருகோணமலை - கண்டி வீதியில் மங்குபிரிஞ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி கோர விபத்தில் சிக்கியதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இன்று (7) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து 

வீதியை விட்டு விலகி குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு