யாழ்.நாவற்குழி - புதிய குடியேற்ற திட்டத்தில் வாள்களுடன் கோஷ்டி மோதல்..! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி - புதிய குடியேற்ற திட்டத்தில் வாள்களுடன் கோஷ்டி மோதல்..! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.நாவற்குழி  - புதிய குடியேற்றத் திட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் உருவாகி அது பின்னர் வாள்வெட்டு மோதலாக மாறியிருக்கின்றது. 

குறித்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு