யாழ்.மாவட்டத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார துறையினருக்கு யாழ்.பாதுகாப்பு படைகளின் தலைமையகம் கௌரவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார துறையினருக்கு யாழ்.பாதுகாப்பு படைகளின் தலைமையகம் கௌரவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா இடர்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 29 வைத்தியர்கள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்த்தர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தல்செவன விடுதியில் இடம்பெற்றது. 

 யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையில் இன்று மதியம் 1 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா, யாழ்மாவட்ட தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பரணிதரன், சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரிகள்,

பொது சுகாதார பரிசோதகர்கள், படைப் பிரிவுகளின் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு