யாழ்.மட்டுவிலில் பிறந்து ஒரு நாளான சிசுவை புதைத்த பெண் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் நேற்று கைது! பெண்ணின் தாய் தொடர்ந்தும் சிகிச்சையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவிலில் பிறந்து ஒரு நாளான சிசுவை புதைத்த பெண் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் நேற்று கைது! பெண்ணின் தாய் தொடர்ந்தும் சிகிச்சையில்..

யாழ்.மட்டுவில் வடக்கு பகுதியில் பிறந்து ஒரு நாளான குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் நேற்றய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் குறித்த பெண்ணின் தாய் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையத்தில் சிசிச்சை பெறும் நிலையில் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் இன்று சாவகச்சோி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். மட்டுவில் வடக்கு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரசவத்திற்கு பின்னர், 

தாயினால் வீட்டின் பின்புறத்தில் சிசு புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 

புதைக்கப்பட்ட சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண் சிசு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு