யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சடலமாக மீட்கப்பட்டவர் புத்துார் வடக்கை சேர்ந்த சுப்ரமணியம் சிவபாலன் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 

புத்துார் வடக்கை சேர்ந்த இவர் உரும்பிராய் தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு பிரதேசசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தனங்கிளப்பில் அவர் வழக்கமாக தங்கும் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

குறித்த வீட்டிலிருந்தவரின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் வீட்டை அவதானித்தபோது துர்நாற்றமும் வீசியுள்ளது. 

இதனையடுத்து உடனடியாக வீட்டுக்குள் பார்வையிட்டபோது அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு