யாழ்.சிறுப்பிட்டி இளைஞனின் மரணத்தில் சந்தேகம். கொலை செய்யப்பட்டதாக கூறி மக்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டி இளைஞனின் மரணத்தில் சந்தேகம். கொலை செய்யப்பட்டதாக கூறி மக்கள் போராட்டம்..!

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இளைஞனின் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை.

மாறாக கொலை செய்யப்பட்டதாகவே நாம் நம்புகிறோம். ஆகவே பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேட்டனர். 

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்திருந்த அச்சுவேலி பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேசுகையில் குறித்த மரணம் தொடர்பில் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும், 

மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு