யாழ்.மாநகரசபையில் செங்கோலுடன் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையில் செங்கோலுடன் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது!

யாழ்.மாநகரசபையில் செங்கோலுடன் முதலாவது அமர்வு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றிருக்கின்றது. 

மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக ல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது. 

நல்லூர் தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில்  உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு