யாழ்.வல்வெட்டித்துறை - தீருவிவில் திடலில் மாவீரர் நாள் நடாத்த அனுமதிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை - தீருவிவில் திடலில் மாவீரர் நாள் நடாத்த அனுமதிக்கப்பட்டது..!

யாழ்.வல்வெட்டித்துறை - தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர்.

தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் பொலிஸார் மறுப்பதால் அனுமதி வழங்க முடியாது என பதிலளிக்கப்பட்டது. 

இந்நிலையில் நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக சபை அமர்வு கூட்டப்பட்டிருந்தது. இதன்போது எடுக்கப்பட்ட சபை தீர்மானத்திற்கு அமைவாக,

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, ஒலிபெருக்கி பயன்படுத்துவதாயின் பொலிஸாரின் அனுமதியை பெற்று, 

பூங்கா கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நினைவேந்தலை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு