சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் காலமானார்..!

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் காலமானார்..!

சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். 

யாழ்.வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு ஆடிமாதம் 25ஆம் திகதி பிறந்த கானமயில்நாதன் இறுதிவரை பத்திரிகையாளராகச் செயற்பட்டுவந்திருந்தார்.

உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட 1985 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி தொடக்கம் அதன் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டிருந்தார்.

போர்க்காலத்தில் ஊடகப்பணியாற்றியமைக்காக 2013 ஆம் ஆண்டு நவம்பர் 27அன்று பிரான்ஸில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் 

தன்னார்வ அமைப்பின் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கானமயில்நாதன் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானதாக தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு