யாழ்.அரியாலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் வீட்டின் மீது கூலிப்படையே பெற்றோல் குண்டு வீசியது! வெளிநாட்டிலிருந்து அனுப்பபட்டது பணம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.அரியாலை பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவருடைய வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

கடந்த மாதம் 10ம் திகதி யாழ்.அரியாலை பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்த கூலிப்படை ரவுகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியிருந்தனர். 

சம்பவம் தொடர்பான சீ.சி.ரீ.வி காட்சிகளும் வெளியாகியிருந்த நிலையில் அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் 18 மற்றும் 22 வயதான இருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் உடுவில் மற்றும் சாவகச்சோி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், வெளிநாட்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் அதற்காகவே தாக்குதல் நடத்தியதாகவும், 

மாவட்டத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கும் தமக்கும் தொடர்புள்ளதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு