யாழ்.மாதகலில் கடற்படையினர் பெருமெடுப்பில் காணி அபகரிப்பு முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் பின்வாங்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் கடற்படையினர் பெருமெடுப்பில் காணி அபகரிப்பு முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் பின்வாங்கினர்..

யாழ்.மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடை எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. 

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.

காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகைதந்திருந்த நிலையில், காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , 

காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு