யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உட்பட வடமாகாணத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 163 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேர், தனியார் வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர், 

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், 

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு