யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் நடந்த அட்டகாசத்துடன் தொடர்புடைய 6 ரவுடிகள் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் நடந்த அட்டகாசத்துடன் தொடர்புடைய 6 ரவுடிகள் கைது..!

யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தியதுடன் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 6 ரவுடிகளை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலால் வீடுகள் மற்றும் சொத்துகள் ஆகியன சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்த தாக்குதலின்போது படுகாயமடைந்த பழம் வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால், அரசடி வீதியிலுள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் இரு தரப்பிலிருந்தும் ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை யாழ்.குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு