யாழ்.வட்டுக்கோட்டையில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த துயர சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த துயர சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டையில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றிருக்கின்றனர். 

நேற்றய தினம் இரவு 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக, மேலும் தொியவருவதாவது, 

சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்குவந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார். 

இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் குறித்த குடும்ப பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது 3 3/4 சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணியின் கைகளிலும் அகப்பட்டது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு