யாழ்.மாவட்ட பாடசாலைகள் நாளை நடைபெறுமா? யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாடசாலைகள் நாளை நடைபெறுமா? யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை வழமைபோல் இயங்கும் என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றும் இன்றும் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நிலைமைகள் ஓரளவு சுமூகமானதைத் தொடர்ந்து நாளை முதல் 

பாடசாலை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் மேலதிகமான எந்த தீர்மானங்களையும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு