யாழ்.கொக்குவில் மேற்கு - கேணியடியில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் மேற்கு - கேணியடியில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..!

யாழ்.கொக்குவில் மேற்கு - கேணியடி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட குழுவினால் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு