குழந்தைகள் காப்பகத்தில் 11 சிறுவர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
குழந்தைகள் காப்பகத்தில் 11 சிறுவர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த காப்பகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 

அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்தில் 

இந்த கொவிட் அவதான நிலை ஏற்பட்டுள்ளது.பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நேற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, 11 குழந்தைகளுக்கு மேலதிகமாக 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் 

மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினரே இவ்வாறு கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு