மின்சாரம் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..! யாழ்.கரவெட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மின்சாரம் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..! யாழ்.கரவெட்டியில் சம்பவம்..

யாழ்.கரவெட்டி பகுதியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது, கட்டிடத்தின் கூரை வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் மின் ஒழுக்கு காரணமாக 

தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தில் துன்னாலை - ஆண்டாள் வளவு பகுதியை சேர்ந்த வி.விஜிதரன் (வயது22) 

என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு