பிரான்ஸில் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மையே! அம்பலப்படுத்தினார் சீ.வி.விக்னேஸ்வரன்..

ஆசிரியர் - Editor I
பிரான்ஸில் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மையே! அம்பலப்படுத்தினார் சீ.வி.விக்னேஸ்வரன்..

யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளகூடாது. என தமது கட்சிசார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு பிரான்ஸிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

செந்தில் தொண்டைமானுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். அந்த கலந்துரையாடலில் எமது கட்சிசார்பில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்த நபர் ஒருவர், 

கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும். என மிரட்டியுள்ளார். என சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு