வடமாகாணத்திலுள்ள 5 மாவட்ட செயலர்களுக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கியுள்ள பணிப்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலுள்ள 5 மாவட்ட செயலர்களுக்கும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கியுள்ள பணிப்பு..!

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளப்படுத்துமாறு மாவட்டச் செயலர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்திருக்கின்றார். 

கடந்த சில தினங்களாக வடக்கில் கனமழை பெய்த நிலையில் தாழ்நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 

அடையாளப்படுத்துமாறும், அந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பு உருவானால் எடுக்கப்படவேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் நிரந்தர தீர்வுக்கான வழிகள் குறித்தும் அறிக்கை சமர்பிக்குமாறு

5 மாவட்டங்களினதும் மாவட்ட செயலர்களை பணித்துள்ளதுடன், 5 மாவட்டங்களிலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் ஆளுநர் பணித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு