“யாழ்” விருது பெற்றார் சுன்னாகம் வாழ்வகம் நிறுவுனர் ரவீந்திரன்..!

ஆசிரியர் - Editor I
“யாழ்” விருது பெற்றார் சுன்னாகம் வாழ்வகம் நிறுவுனர் ரவீந்திரன்..!

யாழ்.மாநகரசபை சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் யாழ் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வரும்,சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் கலந்து கொண்டதோடு 

சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.ஆன்மீகத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் நல்லைக்குமரன் நூல்வெளியிடப்பட்டதுடன் இவ்வருடத்துக்கான 

யாழ் விருது சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு.ஆ.ரவீந்திரனுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு