யாழ்.மாவட்டத்தின் மீது படையினருக்குள்ள அக்கறை குறித்து மக்களுக்கு நன்றாக தொியும்! இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் மீது படையினருக்குள்ள அக்கறை குறித்து மக்களுக்கு நன்றாக தொியும்! இராணுவ தளபதி..

யாழ்.மாவட்ட மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் நன்றாக அறிவார்கள். என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவத்தளபதி,

யாழ். குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கும் விசேட கடமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்து 

அமைதியான சூழலை உருவாக்கி தொடர்ந்தும் தங்களது சேவைகளை வழங்கியமைக்காக நன்றிகளை தெரிவித்தார்.அதேபோல், வடக்கில் உள்ள சிலர் தங்களது தனிப்பட்ட நன்மைகள் 

மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் யாழில் வாழும் தமிழ் சமூகம் மனிதாபிமான நடவடிக்கையின்போதும் 

தற்காலத்திலும் படையினரால் யாழ்.மாவட்டத்தின் மீது காட்டப்படும் அக்கறையை நன்கறிவர். அதற்கமைவான கண்ணியமான பணியை படையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு