யாழ்.இளவாலையில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய ஹயஸ்..! துரத்திச் சென்று தெல்லிப்பழையில் மடக்கிய பொலிஸ், ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய ஹயஸ்..! துரத்திச் சென்று தெல்லிப்பழையில் மடக்கிய பொலிஸ், ஒருவர் கைது..

யாழ்.இளவாலை பகுதியிலிருந்து கஞ்சாவுடன் பயணித்த ஹயஸ் வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்று தெல்லிப்பழையில் வைத்து மடக்கியதுடன், சாரதியை கைது செய்துள்ளதுடன், வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

இளவாலை பகுதியில் கஞ்சாவுடன் ஹயஸ் வாகனம் ஒன்று பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வாகனத்தை சோதனையிட முயற்சித்த நிலையில் வாகனம் தப்பி ஓடியுள்ளது. 

இதனையடுத்து துரத்திச் சென்ற பொலிஸார் யாழ்.தெல்லிப்பழையில் வைத்து வாகனத்தை கைப்பற்றியதுடன், அதிலிருந்து 2 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன் வாகன சாரதியை கைது செய்தள்ளனர். 

குறித்த நபர் வவுனியாவிலிருந்து கஞ்சா வாங்குவதற்காக இளவாலைக்கு வந்தமை விசாரணைகளில் தொியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு