முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம்..! இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அடிக்கல் நாட்டினார்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம்..! இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அடிக்கல் நாட்டினார்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு வீடமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல்லை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று நாட்டியுள்ளார். 

யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையிலேயே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 

விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளியின் வீட்டுக்கு அடிக்கல் நாட்டினார். குறித்த போராளியின் பெற்றோர் உயிரிழந்துள்ளதுடன் இவர் தற்போது சகோதரியுடன் வசித்து வருகின்ற நிலையில் 

இராணுவத்தினரிடம் உதவியினை கோரியதை தொடர்ந்து இந்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதேவேளை குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பம் ஒன்றுக்காக 

உடுவில் பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய இல்லம் ஒன்றும் பயனாளிகளிடம் இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு உட்பட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு