யாழ்.கீரிமலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது..!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக 0.6474 ஹெக்ரயர் மக்களுக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன. கீரிமலை - நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் 

இன்றைய தினம் காலை குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் 

மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால்அளவிட்டு பணிகளுக்காக வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு