தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது..!

ஆசிரியர் - Editor I
தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது..!

தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு யாழ்.திருநெல்வேலியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது. 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், 

தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சியி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு