இரவு நேரத்தில் காவலாளி உள்ளபோதும் தொடர்ந்து களவுபோகும் தேங்காய் மூடைகள்..! கொடிகாமம் சந்தையில் நடப்பது என்ன?

ஆசிரியர் - Editor I
இரவு நேரத்தில் காவலாளி உள்ளபோதும் தொடர்ந்து களவுபோகும் தேங்காய் மூடைகள்..! கொடிகாமம் சந்தையில் நடப்பது என்ன?

யாழ்.கொடிகாமம் சந்தையில் காவலாளி உள்ளபோதும் தொடர்ச்சியாக சந்தையில் வைக்கப்படும் தேங்காய் மூடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருவதாக தேங்காய் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், 

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியும் பொறுப்புவாய்ந்தவர்கள் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். சாவகச்சோி பிரதேசசபையினால் கொடிகாமம் சந்தைக்கு இரவு நேர காவலாளி நியமிக்கப்பட்டள்ளார். 

ஆனாலும் தொடர்ச்சியாக சந்தையில் வைக்கப்படும் தேங்காய் மூடைகள் திருடப்பட்டே வருகின்றது. இது எப்படி நடக்கிறது? என விவசாயிகள் விசனம் தொிவித்திருக்கின்றனர். மேலும் பிரதேசசபை இந்த விடயத்தில் 

மௌனமாக இருப்பதாகவும் தேங்காய் வியாபாரிகள் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு