வடக்கில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
வடக்கில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பம்..!

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர் உட்பட்ட முன்களச் செயற்பாட்டாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதன் தொடராக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு