யாழ்.கீரிமலையில் 0.6474 ஹெக்டயர் மக்களின் நிலத்தை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க திட்டம்..! நாளை அளவீடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலையில் 0.6474 ஹெக்டயர் மக்களின் நிலத்தை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க திட்டம்..! நாளை அளவீடு..

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக சுமார் 0.6474 ஹெக்டயர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. 

கீரிமலை - நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் நாளை காலை .8.30 மணிக்கு குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே

அளவீட்டு பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் காணி அளவீட்டை தடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்று திரளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு