யாழ்.வல்வெட்டித்துறையில் வாள்கள், போதைப் பொருட்களுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் வாள்கள், போதைப் பொருட்களுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்..!

யாழ்.வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் நேற்றய தினம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கூரிய ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பன்னிரண்டு பேர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். 

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு