யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதிப்பு, ஓரு வீடு முற்றாக சேதம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் சண்டிலிப்பாய் பகுதியில் 9 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்துள்ளது. இதன்படி சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 141, ஜே 142 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்பட்ட பகுதிகளிலேயே 

மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 

அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு எனினும் குறித்த காலநிலையானது மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு