யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கவில்லை..! மாவட்டச் செயலர் மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கவில்லை..! மாவட்டச் செயலர் மக்களுக்கு எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் குறைந்துள்ளதுடன், நிலைமை வழமைக்கு திரும்பியிருப்பினும் மக்கள் மிக நிதானத்துடன் செயற்படவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தொிவிக்கையில், 

மாவட்டத்தில் தற்பொழுது கொவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையே காணப்படுகின்றது. இருந்த போதிலும் நேற்றைய தினம் கிடைத்த பீ.சி.ஆர் பரிசோதனை அடிப்படையில் 

யாழ் மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் நேற்றுவரை 17 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றுவரை 452 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்து காணப்படுகின்றது. நேற்று வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 17,500 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் தற்பொழுது இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு தலங்களுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே மக்கள் சற்று அவதானமாக தொடர்ந்தும் சுகாதார நடைமுறையினை பின் பற்றி செயற்படுவது அவசியமாகும் ஆரம்பபிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. 

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்தபோது மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. 

எதிர்வரும் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுன்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு