ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் 3 தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம்..! கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதமாம்..

ஆசிரியர் - Editor I
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் 3 தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம்..! கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதமாம்..

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதை அமுலாக்கும் வகையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியில் 3 தமிழர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தொிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேற்படி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் இல்லையென்பதை நேற்று மாலை நடந்த ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சுட்டினர். 

இதனையடுத்து வடக்கு , கிழக்கு , மலையக பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மூவரை நியமிக்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். அந்த மூன்று உறுப்பினர்களின் பெயரை செயலணிக்கு அனுப்ப மேற்படி தமிழ் அரசியல் பிரமுகர்கள் 

கேட்கப்பட்டனரென அறியமுடிந்தது. ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு