இளம் குடும்ப பெண் துஸ்பிரயோகம்..! 21 வயதான இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
இளம் குடும்ப பெண் துஸ்பிரயோகம்..! 21 வயதான இளைஞன் கைது..

இளம் குடும்ப பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவருடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நன்னபுராவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவத்தில் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் திருமமானவர் என்பதுடன், குறித்த பெண்ணின் கணவரின் சகோதரரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். 

துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் நேற்று முன்தினம் (26) வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபரினால் 

குறித்த பெண் பலவந்தமாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய 

மதுருகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பாதிக்குள்ளானவர் வைத்திய பரிசோதனை நடவடிக்கைகளுக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு