ரயில் தண்டவாளத்திலிருந்து 112 ஆணிகளை பிடுங்கிய விசமிகள்..! பாரிய விபத்து தடுக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ரயில் தண்டவாளத்திலிருந்து 112 ஆணிகளை பிடுங்கிய விசமிகள்..! பாரிய விபத்து தடுக்கப்பட்டது..

ரயில் தண்டவாளத்தை பற்றியிருப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆணிகளில் சுமார் 112 ஆணிகளை விசமிகள் பிடுங்கிய நிலையில் குறித்த விடயம் முன்கூட்டியே அறியப்பட்டதால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 

குறித்த சம்பவம் கரையோர புகைரத பாதையில் கிங்தொட்ட பகுதியிலும், ரத்கம பகுதியிலுமாக சுமார் 112 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கிங்தொட்ட தொடருந்து நிலையம் தொடக்கம் 

கிங்தொட்ட பாலம் வரையிலான தொடருந்துப் பாதையில் பாலத்திற்கு நெருக்கமாக 70 ஆணிகளும், ரத்கம நோக்கிய பகுதியில் 42 ஆணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து திணைக்களம் 

பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருப்பதாக தெரியவருகிறது.குறித்த விசமத்தமான செயற்பாடுகளால் பாரிய உயிர் ஆபத்துக்கள் நிகழ்ந்திருக்க க்கூடிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு