வைத்தியசாலை ஊழியரின் மரண சடங்கில் கலந்துகொண்டிருந்த 35 பேருக்கு கொரோனா தொற்று..! மேலும் பலரின் விபரங்கள் சேகரிப்பு..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலை ஊழியரின் மரண சடங்கில் கலந்துகொண்டிருந்த 35 பேருக்கு கொரோனா தொற்று..! மேலும் பலரின் விபரங்கள் சேகரிப்பு..

வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த 35 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

மினுவாங்கொடை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது. மரண வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு 

ஒரு வாரத்துக்குப் பின்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மரண வீட்டில் பங்கேற்றவர்களில் சிலருக்குத் தொண்டை நோவு, 

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.இதனையடுத்து மரண வீட்டில் பங்கேற்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 

35 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மரண வீட்டுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் வருகை தந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

எனவே, இந்த மரண வீட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களைச் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திரட்டி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு