வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்..!

வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சு செயலாளராக கடமையாற்றிய சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகளை வழங்க பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைவாக சபா நாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான பாராளுமன்ற பேரவையினால் குறித்த நியமனங்களுக்கு ஓப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கடமையாற்றிய வி.சிவஞானசோதி காலமான நிலையில் அவருடைய பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 

அதேபோல் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு P.S.M. சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். நேற்று முன்தினம் இந்த இணக்கம்

தொிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு