யாழ்.மிருசுவிலில் வீடு புகுந்து வயோதிப தம்பதிகள் மீது தாக்குதல்..! படுகாயமடைந்த தம்பதிகள் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மிருசுவிலில் வீடு புகுந்து வயோதிப தம்பதிகள் மீது தாக்குதல்..! படுகாயமடைந்த தம்பதிகள் வைத்தியசாலையில் அனுமதி..

அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் வயோதிப தம்பதிகள் இருவர் யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மிருசுவில் - தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுளள்ளது. வயோதிப தம்பதிகளின் காணிக்குள் அத்துமீறி நுழைந்த

அயல் வீட்டார் தம் மீது தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த வயோதிப தம்பதிகள் கூறியிருக்கின்றனர். 

சம்பவத்தில் 69 வயதான கணவனும், 52 வயதான மனைவியும் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு