அரசாங்கத்தை விமர்சித்த உயர் அதிகாரி உடன் அமுலாகும் வகையில் பதவி நீக்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
அரசாங்கத்தை விமர்சித்த உயர் அதிகாரி உடன் அமுலாகும் வகையில் பதவி நீக்கப்பட்டார்..!

அரசாங்கத்தை விமர்சித்த பேராதனை பல்கலைகழக விவசாய பீட பேராசிரியர் புத்தி மரம்பே விவசாய அமைச்சில் வகித்துவந்த சகல பதவிகளில் இருந்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்கவிடம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய விவசாயக் கொள்கை, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் 

மற்றும் சிறுதொழில் வியாபாரக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவில் இருந்து பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.அ

ரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு