சகல பல்கலைகழகங்களையும் திறக்க அனுமதி..! திறக்கும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு..

ஆசிரியர் - Editor I
சகல பல்கலைகழகங்களையும் திறக்க அனுமதி..! திறக்கும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு..

கொவிட்-19 பரவல் அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 1ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் பல்கலைகழகங்களை திறக்கும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பல்கலைகழங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ், 2 வாரங்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் போட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு